கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள கனடியர்களுக்கான சம்பள மானியத்தை விரிவுபடுத்துதல் வணிக நிறுவனங்களுக்கான வாடகை மானியத் திட்டத்தை உருவாக்குதல் உள்ளிட்ட புதிய உதவித் திட்டங்களுக்கான முன்வரைபுகளை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்துள்ளார்.
இந்த திட்ட முன்வரைவு ஒப்புதலுக்காக கனடிய பொது மன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் கூறினார்.
தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு இடையே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் புதிய உதவித் திட்ட முன்வரைவு சமர்ப்பிக்கப்படுகிறது.
இந்த உதவித்திட்ட முன்வரைபு தற்போது செனட் சபையின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில் இந்த உத்தேச உதவித்திட்ட முன்வரைபை விரைவாக அங்கீகரிக்குமாறு பிரதமர் செனட் சபையைக் கோரியுள்ளார்.
இந்த உதவித் திட்ட யோசனைக்கு பொதுமன்றத்தின் அங்கீகாரம் விரைவில் கிடைக்கும் என நம்புவதாகவும் பிரதமர் ட்ரூடோ கூறினார்.
கனடாவில் கடந்த மாதம் முதல் கோவிட்-19 தொற்று நோயாளர் தொகை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில் தேசிய அளவிலான அவசர நிலை அறிவிக்கப்பட வேண்டுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் கோவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பிரதமர் ட்ரூடோ தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார்.
கட்டுப்பாடுகள் தொடர்வதானது கனடியர்கள் மற்றும் கனடிய வர்த்தக சமூகத்தினருக்கு கடினமானது என்பதை நாங்கள் அறிவோம். எனினும் பாதிக்கப்படுவோருக்கு வலுவான ஆதரவை ஆரம்பத்தில் இருந்தே மத்திய அரசு வழங்கி வருகிறது எனவும் ட்ரூடோ தெரிவித்தார்.